மிதப்புகள்

என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...

Friday, 10 September 2010

ஆச்சர்யம்

மூன்றாவது
பிள்ளைப்பேற்றின் போது
சிக்கலாகி இறந்து போனாளாம்
அத்தாயி பாட்டி
தலைப்பிரசவத்தின் போது
மாரடைப்பு வந்து
கண்ணுக்கு முன்னால்
உயிர் நின்றதாம்
சகுந்தலா அக்காவுக்கு
இதற்கெல்லாம் பயந்து போய்
அறுவை சிகிச்சை மூலம்
குழந்தை பெற்றேன் நான்
இருந்தும்
உயிர்போய் உயிர் வந்துவிட்டது
உதிரப்போக்கு நிற்காமல்
கொஞ்ச நேரம்
எப்படியென்றே தெரியவில்லை
தொடர்ந்து
சுகப்பிரசவமே நடக்கிறது
எங்கள் வீட்டு
நாட்டுப் பசுவுக்கு மட்டும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home