ஆச்சர்யம்
மூன்றாவது
பிள்ளைப்பேற்றின் போது
சிக்கலாகி இறந்து போனாளாம்
அத்தாயி பாட்டி
தலைப்பிரசவத்தின் போது
மாரடைப்பு வந்து
கண்ணுக்கு முன்னால்
உயிர் நின்றதாம்
சகுந்தலா அக்காவுக்கு
இதற்கெல்லாம் பயந்து போய்
அறுவை சிகிச்சை மூலம்
குழந்தை பெற்றேன் நான்
இருந்தும்
உயிர்போய் உயிர் வந்துவிட்டது
உதிரப்போக்கு நிற்காமல்
கொஞ்ச நேரம்
எப்படியென்றே தெரியவில்லை
தொடர்ந்து
சுகப்பிரசவமே நடக்கிறது
எங்கள் வீட்டு
நாட்டுப் பசுவுக்கு மட்டும்


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home