மிதப்புகள்

என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...

Tuesday, 28 September 2010

சூழ்நிலை



குருவிக் கூட்டின்
தொழில் நுட்பம் கொண்டு
அருவிக் கரையில் வீடு கட்டி
மேகம் தரும்
முதல் நீர் கொண்டு
தாகம் போக்கி
காற்றில் அவிழ்ந்த
பூவின் வாசம்
மூக்கில் மோத
தென்னங்கீற்று
மெல்ல வந்து
கன்னம் தடவ
இரை தேடச் செல்லும்
அதிகாலைப் பறவையின்
இரைச்சலில் கண்விழித்து
வாழ்ந்திடும் ஆசை கொண்ட நான்
வேலை நிமித்தமாய்
மாநகரொன்றில் வாழ்கிறேன்
ஐந்து பேரோடு
அறையைப் பகிர்ந்து ...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home