சூழ்நிலை
குருவிக் கூட்டின்
தொழில் நுட்பம் கொண்டு
அருவிக் கரையில் வீடு கட்டி
மேகம் தரும்
முதல் நீர் கொண்டு
தாகம் போக்கி
காற்றில் அவிழ்ந்த
பூவின் வாசம்
மூக்கில் மோத
தென்னங்கீற்று
மெல்ல வந்து
கன்னம் தடவ
இரை தேடச் செல்லும்
அதிகாலைப் பறவையின்
இரைச்சலில் கண்விழித்து
வாழ்ந்திடும் ஆசை கொண்ட நான்
வேலை நிமித்தமாய்
மாநகரொன்றில் வாழ்கிறேன்
ஐந்து பேரோடு
அறையைப் பகிர்ந்து ...


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home